களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா - ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

தை மாதம் 5ஆம் நாளையொட்டி, கடலூரில் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா - ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
x
தை மாதம் 5ஆம் நாளையொட்டி, கடலூரில் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர்,  மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து அதிகாலையில் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்டு வாகனங்களில் பெண்ணையாற்றுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். அத்துடன் இந்த திருவிழாவில் மட்டுமே  கிடைக்கும் சுருளி கிழங்கினை, ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்