5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கும் விவகாரத்தில் குழப்பம்

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கும் விவகாரத்தில் குழப்பம் நிலவுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கும் விவகாரத்தில் குழப்பம்
x
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேறு மையங்கள் ஒதுக்க படாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  ஆனால் தேவையின் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை அமைத்து கொள்ளலாம் என தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
மேலும் தேர்வு மையங்களை இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என அதிகாரிகள் சோதனை செய்யலாம் என்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அமைச்சர் அளித்த உறுதி மொழிக்கு எதிராக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்