திருச்சி : மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி
திருச்சியில் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்று நகைக்கடை அதிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்று நகைக்கடை அதிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனவளர்ச்சி குன்றிய தனது மகன் முகிலுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமான பணம் செலவழித்தும் எந்த பலனும் இல்லாததால் நகைக்கடை அதிபர் செல்வராஜ் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். இதனால் திருச்சியில் உள்ள விடுதியில் மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் 3 பேரும் உயிரிழந்தனர், செல்வராஜ் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story