சென்னை சென்ட்ரலில் காணாமல் போன குழந்தை மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 2 வயது குழந்தையை கடத்திய நபரை திண்டுக்கல்லில் கைது செய்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
சென்னை சென்ட்ரலில்  காணாமல் போன குழந்தை  மீட்பு
x
அசாம் மாநிலத்தை சேர்ந்த மெர்ஜினா என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தை ரசிதா   சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 
தூங்கி கொண்டிருந்த போது  கடத்தப்பட்டார் .  அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு ரயில்வே போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர் ..  இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் அருகே  வந்த போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் கையில் குழந்தையை ஒருவர் வைத்திருப்பதை கண்ட ரயில் பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த ரயில் பெட்டியில் ரோந்து பணியில் இருந்த  போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர்  மேற்கு வங்கத்தை  சேர்ந்த தீபக் மண்டல் என தெரிய வந்தது. அவர் முன்னுக்குபின் தகவல் அளித்ததால் அந்த 2 வயது குழந்தை மற்றும்  தீபக் மண்டல் என்பவரையும் திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம்  ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்தக் குழந்தை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காணாமல் போன குழந்தை என்பது தெரியவந்தது. பின்னர் கடத்தி வரப்பட்ட குழந்தை ரசீதா மற்றும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தீபக் மண்டல் ஆகிய இருவரையும் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்