கிராம‌ப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர் விளையாட்டுதிட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கிராம‌ப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர் விளையாட்டுதிட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் 110 வது விதியின் கீழ் இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்த, 76 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 300 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்படும் விளையாட்டு மைதானங்களில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தை முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து  தொடங்கி வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்