சில்லறை வாங்குவது போல திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகிய திருட்டு

சென்னை தாம்பரம் அருகே மருந்து கடையில் சில்லறை வாங்குவது போல் நடித்து மர்மநபர் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில்லறை வாங்குவது போல திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகிய திருட்டு
x
கடைக்கு வந்த மர்ம நபர் 10 ரூபாய்க்கு மருந்து வாங்கி விட்டு, ஐந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். கடைக்காரர் இருபது 500 ரூபாய் நோட்டுகளை திருப்பி கொடுத்துள்ளார். அதை பெற்று கொண்ட நபர், 100 ரூபாய் தாள்களாக இல்லையா எனக்கூறி பேச்சு கொடுத்து, சில்லறை வேண்டாம் எனக்கூறி பணத்தை திருப்பி கொடுத்து விட்டு, 10 ஆயிரம் ரூபாயை பெற்று கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் கடையில் இறுதி கணக்கை சரி பார்த்த போது 5 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்ததால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த மர்ம நபர் பணத்தை திருப்பி கொடுக்கும் போது, 5 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டது தெரிய வந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்