சிஏஏ-வுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் - 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஏஏ-வுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் - 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது
x
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி, அடியக்கமங்கலம் கடை வீதியிலிருந்து, பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தேசிய கொடியுடன் ரயில் நிலையத்திற்கு பேரணியாக சென்றனர். அப்போது தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையும் மீறி சென்ற போராட்டக்காரர்கள், அவ்வழியாக வந்த சரக்கு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்