தாயை பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்த குட்டியானை : வனப்பகுதிக்குள் விரட்டிய இளைஞர்கள்

ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாயை பிரிந்து கிராமத்திற்குள் நுழைந்த குட்டியானை : வனப்பகுதிக்குள் விரட்டிய இளைஞர்கள்
x
ஒசூர் அருகே காட்டுயானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டியானை ஒன்று, கிராமத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அகரம் கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த அந்த குட்டியானையை, இளைஞர்கள் துரத்திச் சென்று அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். தாயிடம் இருந்து பிரிந்து வந்த அந்த குட்டியானை, ஜல்லிக்கட்டு காளை போல, துள்ளிக்குதித்து ஓடியது. இந்நிலையில், அந்த குட்டியானை தாயிடம் சேர்ந்ததா? என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்