வேலை செய்த கடையில் திருட்டு - 1 கிலோ நகையை நூதனமாக திருடிய ஊழியர்

கடலூரில் வேலை செய்த கடையில் ஊழியர் ஒரு கிலோ தங்கம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வேலை செய்த கடையில் திருட்டு - 1 கிலோ நகையை நூதனமாக திருடிய ஊழியர்
x
கடலூரில் உள்ள பிரபல நகைக்கடையில் 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்த கலைச்செல்வன் வேலைக்கு சேர்ந்த 2 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத நிலையில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். நகைகளை சரிபார்க்கும் வேலையை செய்து வந்த இவர், சிறிது சிறிதாக 1 கிலோ அளவிற்கு நகைகளை திருடியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் கலைச்செல்வன் விடுமுறை எடுக்கவே, கடை உரிமையாளர் நகைகளை சரிபார்த்த போது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார், கலைச்செல்வனை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்