தூத்துக்குடியில் ஒரே ஒரு வேட்பாளரை வைத்து வாக்கு எண்ணிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் ஒரே ஒரு வேட்பாளரை வைத்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஒரே ஒரு வேட்பாளரை வைத்து வாக்கு எண்ணிக்கை
x
வடக்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு உமா, வள்ளித்தாய் இருவரும் போட்டியிட்டனர். இதில் உமாவின் பெயர் துணை வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் கடந்த 2ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வள்ளித்தாய், வாக்கு எண்ணிக்கையிலும் கலந்து கொள்ளவில்லை. இறுதியில், உமா முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், மொத்தம் பதிவான 157 வாக்குகளில் உமா 118 வாக்குகள் பெற்றிருந்ததால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வள்ளியம்மாள், 28 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்