ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம்: "2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2 ஆயிரத்து 22ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர்களுக்கு சிறப்பு காப்பீடு திட்டம்: 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - பேரவையில் துணை முதலமைச்சர் தகவல்
x
கேள்வி நேரத்தில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 266 நபர்களுக்கு, 909 கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக கூறினார். ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்