போதை மாத்திரை கடத்த முயன்ற வழக்கு : 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற மூன்று பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது
மலேசியாவுக்கு போதை மாத்திரை கடத்த முயன்ற மூன்று பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மொத்தம் ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் வைத்து முகமது அலி,இம்ரான்கான், நூருல் அமீன் ஆகிய மூன்று
பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Next Story

