நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருப்பூரை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதித்துறை, வழக்கறிஞர்கள், காவல் துறையினரைப் பற்றி மோசமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக திருப்பூரை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், ராம்மோகன் மற்றும் வித்யா கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் விண்ணப்பிப்பதற்காக அங்கேரிபாளையத்தை சேர்ந்த பழனிகுமார் , நாகராஜன் , விஜயகுமார், சிவக்குமார், சரவணன், ராக்கிமுத்து , சுப்ரமணியன், ஆகியோர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையை கேட்டு நீதிமன்ற பணியாளர்களுக்கு இடையூறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
=======
Next Story