"உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார். தேர்தல் பணிகள் குறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டது தொடர்பான எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை எனக் கூறிய அவர், ஏலம் விடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 378 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்