தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் : சென்னை மாநகராட்சியை எதிர்த்து வழக்கு

தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி மறுக்கும் சென்னை மாநகராட்சி சட்ட திருத்தத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் : சென்னை மாநகராட்சியை எதிர்த்து வழக்கு
x
தனியார் இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி மறுக்கும் சென்னை மாநகராட்சி சட்ட திருத்தத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை ஹோர்டிங்ஸ் சங்கம் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் இடங்களில் விளம்பர பலகை வைக்க அனுமதி மறுப்பது, அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று வாதாடினார்.   இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Next Story

மேலும் செய்திகள்