சென்னை : திரையரங்கிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : திரையரங்கிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்
x
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு  தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். நேற்றிரவு சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, தொலைபேசி மூலம் ​​பேசிய மர்மநபர் ஒருவர், வில்லிவாக்கத்தில் உள்ள  திரையரங்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி தொடர்பை துண்டித்தார். இதனையடுத்து, திரையரங்க வளாகத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், வெடிகுண்டு எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்