ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடர் : தடைகோரி ஜெ.தீபா மனு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில், டிசம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் கவுதம் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் திரைக்கதை உள்ளதா என்பதை சரிபார்க்கும், கட்டாயம் இருப்பதால் தலைவி படத்தையும், குயின் தொடரையும் வெளியிட கூடாது என ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குயின் தொடர்  சனிக்கிழமை வெளியாக உள்ளதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார். இயக்குனர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு ஆவணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றார். இதனையடுத்து நீதிபதி ஆவணங்களை இயக்குநர் தரப்புக்கு தர தீபா தரப்பு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைதார்.

Next Story

மேலும் செய்திகள்