ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 3 ஆயிரத்து 537 ஊரக - உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏராளமானோர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை பெற, 26 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும்
 524 உதவி அலுவலர்கள் மனுக்களை பெற்று வருகின்றனர்.

* திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளான இன்று அரசியல் கட்சிகள் அல்லாத சுயேச்சைகள் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

* மதுரை தல்லாகுளம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மதுரை மாவட்டத்தில்13 ஒன்றியங்களிலுள்ள ஊரக ஊராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், காலை முதலே பலரும் ஆர்வமுடன் தாக்கல் செய்தனர்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஒன்றியம் மற்றும் 497 ஊராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர். 



Next Story

மேலும் செய்திகள்