திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது - உயர் நீதிமன்றம்

திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது - உயர் நீதிமன்றம்
x
கோவையில் உள்ள தனியார் விடுதி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து விடுதி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுதியில் நடைபெற்ற சோதனையின் போது திருமணமாகாத ஆணும், பெண்ணும் தங்கி இருந்ததாகவும், மது விற்பனைக்கான உரிமம் பெறாத நிலையில் வேறொரு அறையில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்க கூடாது என சட்டம் ஒன்றும் இல்லாத நிலையில்,  திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதேபோல, திருமணமாகாத ஆணும் பெண்ணும் 'லிவிங் டூ கெதர்" முறையில் சேர்ந்து வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும்  ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என கூறினார்.அத்துடன் , விடுதி அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும்  நீதிபதி தெரிவித்தார்.  இந்த விடுதியை மூடும்போது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றாததால், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்