சேலம் தீயணைப்பு நிலையங்களில் டி.ஜி.பி. ஆய்வு

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் தீயணைப்பு நிலையங்களில் டி.ஜி.பி. ஆய்வு
x
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு,  சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் சூரமங்கலத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தீயணைப்பு நிலையங்களில் உள்ள உபகரணங்கள் சரியாக வேலை செய்கிறதா? என்றும், வாகனங்கள் சரியாக இயங்குகிறதா? என்றும் நேரில் பார்த்து தெரிநது கொண்டார்.  பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் எப்படி செய்வீர்கள் என்றும்,  தீயணைப்பு வீரர்களிடம் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு என்ன என்ன குறைகள் உள்ளன என்பதையும் கேட்டறிந்ததோடு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்