வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை : வெளிநாடுகளில் இருந்து அடுத்த மாதம் வரும் வெங்காயம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை : வெளிநாடுகளில் இருந்து அடுத்த மாதம் வரும் வெங்காயம்
x
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிடுகிடுவென உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்த, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிலையில் அந்த வெங்காயம் வரும் ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, முக்கிய உற்பத்தி மையமான நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெங்காயம் வந்து சேர இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்