"பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
x
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தமிழக அரசுக்கு எதிராக பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மீண்டும் பொன்மாணிக்கவேலை நியமிக்க கோரி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் பொன்மாணிக்கவேல் தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்