இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தல் : மெட்ரோ ரயில் நிலையத்தில் வைத்து 350 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னைக்கு இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்தல் : மெட்ரோ ரயில் நிலையத்தில் வைத்து 350 கிராம் தங்கம் பறிமுதல்
x
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்ல வந்த உடமைகளை மெட்ரோ ரயில் நிலைய காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த முகமது சபீர் என்பவர், தங்கத்தை பையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் முகமது சபீர் எப்படி தப்பி வந்தார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்