உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி தி.மு.க. மனு : இன்று விசாரணை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில், திமுக மனு தாக்கல் செய்து உள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி தி.மு.க. மனு : இன்று விசாரணை
x
தமிழகத்தில்  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என, தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம்தேதி அறிவித்தது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வில்லை.  உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு  தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில், தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,  தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்னர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேர்தல் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் பிரமாண பத்திரம் தாக்கல் தொடர்பான விசாரணை, இன்று வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. சார்பில் இந்த மனு தாக்கல்  செய்யப்பட்டு உள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்