ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவு தினம் : அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்துக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அமைதி ஊர்வலமாக வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். அமமுக உள்ளிட்ட கட்சிகளும் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிட கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடையாத நிலையில் அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Next Story