நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சென்னையை சேர்ந்த மாணவரின் தந்தை கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சென்னையை சேர்ந்த மாணவரின் தந்தை கைது
x
நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீட்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட   சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவருக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அவரது தந்தை ரவிக்குமாரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இதன்படி நேற்று, மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்த ரவிக்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இன்று அவரை தேனி  அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, ரவிக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்