குடியிருப்புக்கு அனுமதி பெற்ற கட்டடத்தில் டாஸ்மாக் : கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, வடபழனி - நெற்குன்றம் பாதையில் குடியிருப்புக்காக அனுமதி பெற்ற கட்டடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்புக்கு அனுமதி பெற்ற கட்டடத்தில் டாஸ்மாக் : கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை, வடபழனி - நெற்குன்றம் பாதையில் குடியிருப்புக்காக அனுமதி பெற்ற கட்டடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்புக்கான அனுமதியை பெற்றுவிட்டு, அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது, தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்ததாகவும், எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும் கோரி வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, டாஸ்மாக் கடைக்கு கண்டனம் தெரிவித்து, கடையை மூடும்படி உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்