புதுக்கோட்டை: மாணவியர் விடுதியை சூழ்ந்த மழை வெள்ளம்
புதுக்கோட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் விடுதியில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளதால் மாணவிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வரும் இந்த விடுதியில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது 50 சதவீத மாணவிகளே விடுதியில் தங்கி உள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story