"கலை, இசையை சென்னை ஊக்குவித்து வருகிறது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
கலை மற்றும் இசையை பல ஆண்டுகளாக சென்னை ஊக்குவித்து வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
கலை மற்றும் இசையை பல ஆண்டுகளாக சென்னை ஊக்குவித்து வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னையில் பிரம்மா கான சபா சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டு கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்தில்சிறந்த விளங்கும் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , பாரம்பரியத்தையும் , பண்பாட்டையும் பாதுகாப்பது அரசுகளின் கடமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். வாரணாசி, ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இசையை சென்னை ஊக்குவித்து வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற கலை, இசை விழாக்கள் ,வளரும் கலைஞர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க அடித்தளமாக அமையும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
Next Story