கொடைக்கானல் : 5வது நாளாக தொடரும் சாரல் மழை - அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கொடைக்கானல் பகுதிகளில் ஐந்தாவது நாளாக இடைவிடாது பெய்த சாரல் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் : 5வது நாளாக தொடரும் சாரல் மழை - அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
கொடைக்கானல் பகுதிகளில் ஐந்தாவது நாளாக இடைவிடாது பெய்த சாரல் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அடர்ந்த மேகமூட்டமும் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்படாததன் காரணமாக மாணவ-மாணவியர் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்குச் சென்றனர். அத்துடன் பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி மற்றும் வட்டக்கானல் நீர்வீழ்ச்சி போன்ற பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்