தரைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம் - போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு அருகே கனமழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 5க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளம் - போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் பாதிப்பு
x
செங்கல்பட்டு அருகே கனமழை வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வில்லியம்பாக்கம் சாஸ்தரம்பாக்கம், வென்பாக்கம், வெங்கடாபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டதாக கூறும் பொதுமக்கள் உயர் மட்ட பாலம் கட்டித் தர கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதியோர், கர்ப்பிணி, நோயாளிகள், வேலைக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியில், அதிவேகமாக ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல், அத்தியாவசிய தேவைக்காக ஆற்றைக் கடக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்