விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர் - இளைஞரின் உதவிக்கு நாசா நன்றி

நிலவில் தரையிறங்கும் போது விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டிபிடிக்க உதவியது மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்பது தெரியவந்துள்ளது.
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர் - இளைஞரின் உதவிக்கு நாசா நன்றி
x
சென்னை தரமணியில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சண்முக சுப்பிரமணியன் தொடர்ச்சியாக விக்ரம் லேண்டர் குறித்து நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆராய்ச்சி செய்துள்ளார். நிலவின் நிலப்பரப்பில் சில இடங்களில் மட்டும் மாற்றம் தென்பட்டதை கண்டுபிடித்த அவர் அந்த தகவல்களை நாசாவிற்கு மெயில் செய்துள்ளார்.  இதனையடுத்து நாசாவும் அவர் அளித்த தகவலை வைத்து விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது. இதனிடையே நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியனுக்கு மெயில் மூலம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.  



Next Story

மேலும் செய்திகள்