கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி
x
கோவை குனியமுத்தூரில் 7 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். பின்னர், கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அங்கு பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள வசதிகள் போன்று கோவையிலும் அமைக்கப்படும் என தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களுக்கு படகு சவாரி, நடைபாதை, பூங்கா, உடற்பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்