மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் - சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் - சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
x
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகமே உய்யக்கொண்டான் வாய்க்கால் கரை ஓரங்களில் கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்துவதால் பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறி மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்