கோவைக்கு முதன் முதலாக விமானத்தில் பயணித்த காப்பக குழந்தைகள்

சென்னையில் உள்ள காப்பகங்களில் தேர்வுசெய்யப்பட்ட 25 குழந்தைகள் விமானம் மூலம் கோவைக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர்.
x
சென்னையில் உள்ள காப்பகங்களில் தேர்வுசெய்யப்பட்ட 25 குழந்தைகள் விமானம் மூலம் கோவைக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி ரஹானா பாடகர் வேல்முருகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் கோவை விமான நிலையத்தில் உற்சாகமாக குழுப்புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்