"தமிழ் படித்ததால் நான் உயர்ந்தேன்" - ரஜினி

தமிழ் கற்றதால் உயர்ந்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் படித்ததால் நான் உயர்ந்தேன் - ரஜினி
x
தமிழ் கற்றதால் உயர்ந்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த்  தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் மத்திய அரசின் சிறப்பு விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் டிடிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்தது தான் தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என அதில் அவர் குறிப்பிட்டுளார். இயக்குநர்களின் நடிகர் நான்  என்று சுட்டிக்காட்டியுள்ள அவர் தொடக்க காலத்தில் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு ஸ்டைலை புகுத்த நினைத்ததாகவும் , வில்லன் வேடத்தில் நடித்ததால் அது சாத்தியமானது என்றும் தெரிவித்துள்ளார். திரைப்பட கல்லூரியில் கன்னட பிரிவில் சேர்ந்த தாம் பாலசந்தரின் அறிவுரையை கேட்டு தமிழ் படித்ததால் உயர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நடிப்பை தான் நேசிப்பதாகவும் , அதனை சுமையாக கருதவில்லை என்றும் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் புதிது புதிதாக ஒன்றை செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே , தாம் அவர்களது அன்புக்கு செலுத்தும் நன்றிக்கடன் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வேலையை நேசிக்க வேண்டும் என்பதே திரையுலகிற்கு வரும் புது முகங்களுக்கு தனது அறிவுரை என்று ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்