சென்னை : மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

கள்ளக்காதலர்களுக்கு நகையை கொடுத்து விட்டு, பாலியல் வன்கொடுமை செய்து நகையை பறித்து விட்டதாக கூறிய திருமணமான பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை - இருவர் கைது
x
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி  இறந்து விட்டதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், வெளியூரில் தங்கி வேலை செய்து வந்த அவர், கடந்த வாரம் வீடு திரும்பி உள்ளார். அப்போது மனைவியின் கழுத்தில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் இருப்பது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் மயக்க மருந்து கொடுத்து தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், தங்க நகையை பறித்து சென்று விட்டதாக, கணவரிடம் மனைவி தெரிவித்தார். புகாரின் பேரில் அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர்களுடன் சுந்தர் மனைவிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்ததுடன், அவரே நகையை எடுத்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்