உள்ளாட்சி தேர்தல் : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், 2018ஆம் ஆண்டில் மறுவரையறை செய்தது நடைமுறையில் இருக்கும் என்பதால், தேர்தலை பாதிக்காது என்று கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்
x
தற்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், 2018ஆம் ஆண்டில் மறுவரையறை செய்தது நடைமுறையில் இருக்கும் என்பதால், தேர்தலை பாதிக்காது என்று கூறியுள்ளார். 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த முன்வந்தபோது, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி மறுவரை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்றது திமுக என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  வார்டு மறுசீரமைப்பு மற்றும், இடஒதுக்கீடு குறித்து அரசாணைகள் வெளியிட்டதையும் அவர் தெரிவித்துள்ளார். 2020-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணி துவங்க இருப்பதால், அதன் பிறகு நிர்வாக அலகை மாற்ற முடியாது என்பதால்,  ஏற்கனவே மக்கள் கோரியபடி, மாவட்டங்களை பிரித்துள்ளதாக அமைச்சர் வேலுமணி அறிக்கை விடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்