மாணவர்களுக்கு 'தினத்தந்தி' கல்வி நிதி : 'தினத்தந்தி'க்கு நாமக்கல் ஆட்சியர் பாராட்டு

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பாக கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு தினத்தந்தி கல்வி நிதி : தினத்தந்திக்கு நாமக்கல் ஆட்சியர் பாராட்டு
x
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு தினத்தந்தி சார்பாக கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் மெகராஜ், 'தினத்தந்தி'யின் கல்வி நிதியை வழங்கினார்.  நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஆட்சியர், வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதில் தினத்தந்தி முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார். மாணவ பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்