கோவை: ரயில் மோதி, பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே விரைவு ரயில் மோதியதில் பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்
கோவை: ரயில் மோதி, பொறியியல் மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
x
சூலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள் சித்திக் ராஜா, விக்னேஷ், ராஜசேகர். கல்லூரிக்கு அரியர் தேர்வெழுத வந்த கருப்பசாமி, கவுதம் ஆகியோருடன்  இவர்கள் சேர்ந்து நேற்றிரவு, இருகூர் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மதுஅருந்தி உள்ளனர். அப்போது அவ்வழியாக கேரளாவில் இருந்து சென்னை  நோக்கி சென்ற ஆலப்புழா விரைவு ரயில் மோதியதில்  சித்திக் ராஜா, ராஜசேகர், கருப்பசாமி, கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவர் விக்னேஷை அப்பகுதி மக்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்