ஈரோடு: விபத்தில் இறந்த தாய் குரங்கு - கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து குட்டி குரங்கு கண்ணீர் விட்ட காட்சி காண்போரை உருக வைத்தது.
ஈரோடு: விபத்தில் இறந்த தாய் குரங்கு - கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு
x
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விபத்தில் இறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து குட்டி குரங்கு கண்ணீர் விட்ட காட்சி காண்போரை உருக வைத்தது.  சென்னிமலை ஈங்கூர் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தாய் குரங்கு ஒன்று குட்டி குரங்குடன் சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று தாய் குரங்கின் மீது மோதியது. இதில் தாய் குரங்குக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்த  பொதுமக்கள் அடிபட்ட குரங்குக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் குரங்கு பரிதாபமாக இறந்தது. தாய் குரங்கு இறந்தது தெரிந்ததும் குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது. மேலும் தாய் குரங்கை கட்டிபிடித்தபடியே நகராமல் அங்கேயே இருந்தது. குட்டி குரங்கின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை கலங்க  செய்தது.

Next Story

மேலும் செய்திகள்