உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையர் தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் : மாநில தேர்தல் ஆணையர் தென் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
x
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் , மதுரை , தேனி , விருதுநகர் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுபோல ராமநாதபுரம், சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுடன் 16-ம் தேதியன்று மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.


Next Story

மேலும் செய்திகள்