பிடிபட்டது காட்டு யானை அரிசி ராஜா
கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி பகுதியில் பல மாதங்களாக சுற்றித்திரிந்த அரிசி ராஜா என்ற காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த வனத்துறையினர், அரிசி ராஜாவை 2 கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகு சலீம், கபில்தேவ் ஆகிய காட்டு யானைகள் அரிசி ராஜாவின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதனை கட்டுப்படுத்தியது.
Next Story