சேலம் : அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் வடியாத நீரால் பொது மக்கள் அவதி

சேலம் மாவட்டம் சிவதாபுரம் குடியிருப்பை சூழ்ந்த ஏரி நீர் வடிந்த போதும், துர்நாற்றம் குறையவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் : அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் வடியாத நீரால் பொது மக்கள் அவதி
x
சேலம் மாவட்டம் சிவதாபுரம் குடியிருப்பை சூழ்ந்த ஏரி நீர் வடிந்த போதும், துர்நாற்றம் குறையவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியதால், கரையில் உடைப்பு ஏற்பட்டு, சிவதாபுரம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதில் ஆயிரக்கணக்கான  குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. தேங்கிய தண்ணீரை வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகளை, அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால், தாழ்வான இடங்களில் நீர் தேங்கி நிற்பதால், அதிக துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் செல்ல முடியாதபடி நீர் தேங்கி நிற்பதால், உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்