கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாம் : பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாம் : பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை
x
கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தாண்டிக்குடி, பெரியூர்,பெருங்கானல் உள்ள விவசாயத் தோட்டங்களில் காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் சாலைகளில் நள்ளிரவில் உலா வரும் யானைகளால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் விவசாய பயிர்களை பாதுகாக்க தோட்டக்காவல் செல்லவும் விவசாயிகள் அச்சப்பட்டு வருகின்றனர். காட்டு யானைகள் நடமாட்டத்தை இரவு பகலாக வனத்துறை ஊழியர்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் சாலைகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்