நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தத்தை எதிர்த்த வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபாதையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தத்தை எதிர்த்த வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையின் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி நாளை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடைபாதைகளை முறையாக பராமரிக்க கோரி, ஆடிட்டர் வந்தனா சக்காரியா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்