நில மோசடி - உறவினர் மீது மூதாட்டி புகார்

போலி வாரிசு சான்றிதழ் மூலம் இடத்தை விற்பனை செய்து ஏமாற்றி விட்டதாக உறவினர் மீது 85 வயது மூதாட்டி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.
நில மோசடி - உறவினர் மீது மூதாட்டி புகார்
x
போலி வாரிசு சான்றிதழ் மூலம், இடத்தை விற்பனை செய்து ஏமாற்றி விட்டதாக உறவினர் மீது 85 வயது மூதாட்டி ஒருவர், புகார் மனு அளித்துள்ளார். கடலூர் முதுநகர் அடுத்த சான்றோர் பாளையத்தை சேர்ந்த ராஜம் என்பவர், உறவினரான பன்னீர்செல்வம் மீது, மாவட்ட கண்காணிப்பாளரிடம் இவ்வாறு புகார் தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள ஆயிரத்து 289 சதுர அடி நிலத்தில், 644 சதுர அடியை போலி ஆவணம் கொடுத்து மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும், அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்