கள்ள தொடர்பை தட்டி கேட்ட பெண் காவலர் : அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது

சென்னையை அடுத்த பரங்கிமலையில் கள்ள தொடர்பை தட்டி கேட்ட பெண் காவலரை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
கள்ள தொடர்பை தட்டி கேட்ட பெண் காவலர் : அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது
x
ஆலந்தூர்  எம்.கே.என். சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்த உமா மகேஷ்வரி, வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது கணவர் டில்லிபாபு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக இருந்த நிலையில், பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளதால், கட்டாய ஒய்வு  அளிக்கப்பட்டு வீட்டில் உள்ளார். இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் டில்லிபாபுவுக்கும் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.  இது குறித்து  உமாமகேஷ்வரி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்  டில்லிபாபுவையும்  ஸ்ரீதேவியையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

அதன்பிறகும் 2 பேருக்கும் இடையே கள்ளத் தொடர்பு தொடர்ந்தது. இதனையடுத்து சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடமும்  உமா மகேஷ்வரி புகார் அளித்தார். இதனையடுத்து டில்லிபாபு, ஸ்ரீதேவி இருவரையும் உயர் அதிகாரிகள் அழைத்து எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், உமா மகேஷ்வரி பணிக்கு சென்ற நிலையில், ஸ்ரீதேவியை வீட்டுக்கு அழைத்து வந்து டில்லி பாபு உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அறிந்த உமா மகேஷ்வரி கணவனிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டில்லி பாபு, உமா மகேஷ்வரியை தாக்​கி சித்ரவதை செய்துள்ளார். இதில் காயமடைந்த பெண் காவலர் உமா மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் கணவர் டில்லிபாபுவை கைது செய்து சி​றையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்