காய்ச்சலால் 32 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதார சீர்கேடே டெங்குவுக்கு காரணம் என மக்கள் புகார்

பொன்னேரியில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 32 பேரில், 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சலால் 32 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதார சீர்கேடே டெங்குவுக்கு காரணம் என மக்கள் புகார்
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், காய்ச்சல் காரணமாக, 6 சிறுவர்கள் உட்பட 32 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில், தினேஷ், மோகனவள்ளி, குமாரபிரகாஷ் ஆகிய 3 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் காய்ச்சல் பரிசோதனைக்காக மட்டும் ஆய்வகத்தில் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொன்னேரியில் தேங்கும் குப்பை, கழிவு நீரை பேரூராட்சி நிர்வாகம் உரிய முறையில் அகற்றாததாலும், மழை செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதாலுமே சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்