மது வாங்கி கொடுத்து நகைகள் திருட்டு : நகைகள் மீட்பு

புதுச்சேரி அருகே ஐ.டி ஊழியருக்கு மது வாங்கி கொடுத்து இரண்டரை சவரன் சங்கிலி மற்றும் செல்போனை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மது வாங்கி கொடுத்து நகைகள் திருட்டு : நகைகள் மீட்பு
x
புதுச்சேரி அருகே ஐ.டி ஊழியருக்கு மது வாங்கி கொடுத்து இரண்டரை சவரன் சங்கிலி மற்றும் செல்போனை திருடி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தவளகுப்பத்தில் வசிக்கும் பூபதி ராஜா என்ற ஐ.டி. ஊழியர், 2 பேரை வீட்டிற்கு அழைத்து சென்று மது குடித்து விட்டு தூங்கியுள்ளார். விழித்து பார்த்த போது அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம் மற்றும் செல்போன் காணவில்லை. வீட்டிற்கு வந்த இருவரையும் காணாததால் பூபதி ராஜா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் செல்வகுமாரை என்பவரை கைது செய்த போலீசார்  ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்